உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி-13பேர் படுகாயம்

மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று   நடைபெற்றுவருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது. மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்றுவருகிறது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1400காளைகள் சீறிப்பாய்கின்றது, 848மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். 7ஏஎஸ்பிக்கள், 15டிஎஸ்பிக்கள் உட்பட 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 7 சுற்றுகளின் முடிவில் 577 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.இதுவரை மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 13பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment