‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா…?’ விரக்தியில் திருடர்கள் செய்த செயல்….!

‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா…?’ விரக்தியில் திருடர்கள் செய்த செயல்….!

தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள் ஒன்றும் கிடைக்காததால், லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை என பல விபரீதமான செயல்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உறவினர் வீட்டில், சில நாட்களுக்கு முன்பதாக கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக செய்திகள் வெளியானது.

துரைமுருகன் உறவினர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற அவர்கள், ஒன்றும் கிடைக்காததால் அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றுள்ளனர். மேலும், அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிசிடிவி பதிவுகளின் மூலம் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, 3 தனிப்படை அமைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது துரைமுருகன் வீட்டின் அருகேயும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அங்குள்ள தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்று பார்த்த அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காததால், அங்கிருந்த டிவியை உடைத்து விட்டு லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர். மேலும் அங்குள்ள விலை உயர்ந்த மது பானத்தை அருந்தி விட்டு, ஒரு நோட்டில் ஒரு ரூபாய்கூட இல்ல, எடுக்கல என்று எழுதிவைத்து விட்டு சென்றுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube