திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – முக ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என முக ஸ்டாலின் அறிவிப்பு.

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதியையும் முதலமைச்சர் பழனிசாமி நாளை நிறைவேற்றி விடுவார் என்றும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து செய்யப்படும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்