அதிமுக அரசை கண்டித்து சேலையை தீ வைத்து கொளுத்திய பெண்கள்…!

நாமாக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், பெண்கள் அதிமுக அரசை கண்டித்து, அதிமுக கொடுத்த சேலையை,  தீ வைத்து கொளுத்தினர். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், பெண்கள் அதிமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் கொடுத்த சேலையை,  தீ வைத்து கொளுத்தினர்.

குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக நிர்வாகி ரவி, பெண்களை தரக் குறைவாக பேசியதால், ஆத்திரத்தில் பெண்கள் இந்த செயலை செய்துள்ளனர். சேலையை எரித்த பெண்கள், பெண்களை தரக்குறைவாக பேசிய ரவியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும்  முழக்கமிட்டனர்.

இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பதாக அவர்களே வந்து சேலையை கொடுத்து விட்டு, தற்போது எங்களை தரக் குறைவாக பேசுகின்றனர் என கூறுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.