பேயை ஓட்டுவதாக கூறி 7 வயது சிறுவனை அடித்து கொன்ற பெண்கள்….! 3 பெண்களை கைது செய்த போலீசார்…!

7வயது சிறுவனை பேய் பிடித்தாக கூறி அடித்து கொன்ற சமத்துவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த சிறுவனின் உடலில் இருந்து பேயை விரட்டுவதாக கூறி, பாக்கியலட்சுமி, திலகவதி, கவிதா என்ற மூன்று பெண்கள் அச்சிறுவனை மாறிமாறி அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் கதறி அழுதுள்ளார்.

கதறிய சிறுவனை கண்டும் விடாத பெண்கள், தொடர்ச்சியாக சிறுவனை அடித்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  சிறுவனை அடித்துக் கொன்ற கேவி குப்பத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, திலகவதி, கவிதை ஆகிய மூன்று பெண்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் பேய் பிடித்ததாக கூறி பெண்கள் மூவரும் அடித்துக் கொன்றதாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரை தொடர்ந்து சிறுவனின் தாய் உட்பட 3 பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7வயது சிறுவனை பேய் பிடித்தாக கூறி அடித்து கொன்ற சமத்துவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.