மகளீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்…!

டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை  பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யுமாறு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இன்று உலகம் முழுவதும் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை  பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு பாதுகாப்பு வழங்கல் போன்ற பணிகளை பெண்களை மேற்கொண்டார்கள்.  இந்த போராட்டத்தில், பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 40 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.