அதிகாலையில் ஐயப்பன் கோவிலில் வழிபட்ட பெண்கள்..!தரிசனம் செய்ததை அடுத்து சபரிமலை கோயில் நடை மூடல் …!

பெண்கள் தரிசனம் செய்ததை அடுத்து சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த முயன்ற போது அதை தடுக்கும் விதமாக கலவரத்தை செய்யும் முயற்சியில் எடுபடது RSS போன்ற சங்பரிவார அமைப்புகள்.RSS இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்து திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சியில் கேரளாவில் பல்வேறு மத வெறி அமைப்புகளை பயன் படுத்தியது கேரள பிஜேபி..

உச்சநீதிமந்திரத்தை தீர்ப்பை அமுல்படுத்த கேரள அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்ட சூழலில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க பிந்து , கனகதூர்கா கருப்பு உடையணிந்து , முகத்தை மூடிக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டனர். இந்நிலையில் மல்லபுரத்தில் உள்ள பிந்து , கனகதூர்கா ஆகியோர் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் உத்தரவுவிட்டது.

இந்நிலையில் பெண்கள் தரிசனம் செய்ததை அடுத்து சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தை புனிதப்படுத்த நடை சாத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Comment