600 நாட்கள் கடந்தும் பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்ஹாசன்

பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – நாகையில் கமல்ஹாசன் பேச்சு

பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நாகை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.

அடுத்தாண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று கமல்ஹாசன் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்