இளைஞர் தொடர்ந்து நக்கல் அடித்ததால் தற்கொலை செய்துகொண்ட பெண் அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷர் மாவட்டத்தில் மொஹல்லா எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய ராம்வீர் என்பவரின் சகோதரி தனது அண்ணனுடன் சேர்ந்து மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த கடையில் அண்ணன் இல்லாத நேரங்களில் மற்றும் வேலை அதிகமாக இருக்கும் நேரங்களில் சகோதரியும் சேர்ந்து கடையை கவனித்துக் கொள்வது வழக்கம்.

அவர்களின் கடைக்கு அருகில் வசிக்கக்கூடிய ஆகாஷ் என்பவர் அடிக்கடி கடைக்கு வரும் பொழுதெல்லாம் ராம் சகோதரியை நக்கல் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து தனது அண்ணனிடம் அவள் கூறியிருந்தாலும், அவளது அண்ணன் சென்று ஆகாஷிடம் கேட்கும்பொழுது திமிராக பதில் அளித்துள்ளார்.

சரி இவனை என்ன செய்வது என்று விட்டுவிட்டு, தனது சகோதரியை தேற்றிவிட்டு அண்ணன் இருந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து அவர் நக்கல் அடித்துக் கொண்டே இருந்ததால் மனமுடைந்த அந்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். மேலும் அது மட்டுமல்லாமல் அவரது சகோதரி இறந்த அன்றே ரம் பிரச்சினை செய்ததால் ஆகாசின் சகோதரர் சர்க்கரை வேண்டும் கடைக்கு வாருங்கள் என்று கூறி விட்டு கதவை திறக்க வைத்துள்ளார்.

அப்பொழுது ஆகாஷ் வேகமாக வந்து ராம்வீர் கழுத்தில் ஒரு கன் வைத்து சுட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். ஏற்கனவே இப்பொழுதுதான் இழப்பை சந்தித்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஆகாஷ் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர்.

author avatar
murugan

Leave a Comment