பெற்றோர்களுக்கான நிலத்தகராறால் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மகன்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பூஞ்சோலை என்ற பகுதியை சேர்ந்த ஜோசப் அன்னமேரி என்பவரின் மகள்தான் பிரியா, இவருக்கு 26 வயதாகிறது. ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்த இவர், ஊரடங்கால் தற்பொழுது வீட்டில் இருக்கிறார். ஏற்கனவே இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கோடன் மல்லிகா என்பவர் குடும்பத்திற்கும் நில சம்பந்தமான பிரச்சனை நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. இதனால் செங்கோடன் மல்லிகாவின் 28 வயது சின்னண்ணன் எனும் இளைய மகன் பிரியாவுக்கு இந்த பிரச்சனையை காரணம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
காட்டு பகுதியில் வசித்து வரக்கூடிய ப்ரியாவின் வீட்டில் கழிவறை இல்லாததால் அவர் வெளியில் செல்லும்பொழுது சின்ன கண்ணன் செல்போனில் படம் எடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரியா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த போது சின்னகண்ணன் அவர்கள் வீட்டிற்கு சென்று பிரியாவுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார், இதனால் அவரது கை மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அவரை மீட்ட உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், செங்கோடன் குடும்பம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சி டி.ஐ.ஜி ஆனியிடம் பிரியா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…