கொரோனா ஊரடங்கால் தனது நண்பர்களுக்கு ட்ரீட் வைக்க மறுத்த பெண்மணிக்கு வீட்டிறகு கேக் அனுப்பி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர் மும்பை காவல்துறையினர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை தவிர்ப்பதற்கு ஊரடங்கு மட்டுமே வழி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடமையாக்கப்பட்டு பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள பெண்மணி ஒருவரிடம் அவரது பிறந்தநாளுக்கு நண்பர்கள் ட்ரீட் கேட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி வெளியில் செல்ல மறுத்த பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த மும்பை காவல்துறையினர் அந்த பெண்ணை பாராட்ட நினைத்து அப்பெண்ணின் வீட்டிற்கே கேக் ஒன்றை அனுப்பி வைவைத்துள்ளனர். மேலும் பொறுப்புள்ள குடிமக்கள் நடந்து கொண்டதற்கு எங்கள் பாராட்டுக்கள் எனவும், உங்களது இன்றைய பாதுகாப்பான கொண்டாட்டம் நிச்சயமாக நாளைய மகிழ்ச்சியான உலகத்தை கொண்டுவர உதவும் எனவும் உங்களுக்கு மீண்டும் எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதோ அந்த பதிவு,
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…
Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…