மாற்றுத்திறனாளியின் சடலத்தை தூக்கி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

மாற்றுத்திறனாளியின் சடலத்தை தூக்கி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

மாற்றுத்திறனாளியின் சடலத்தை தூக்கி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

இன்று உலகம் முழுவதும், கொரோனா அச்சத்தால் நிறைந்துள்ள நிலையில், எந்த மனிதர்களோடும் மக்கள் எளிதில் பழகுவதற்கும், அவர்களுக்கும் உதவுவதற்கும் தயக்கம் காட்டி தான் வருகின்றனர். 

இந்நிலையில், வந்தவாசி அருகே, கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில், மாற்றுத்திறனாளி ஒருவர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர் தன்னை காப்பாற்றி கொள்ள இயலாத நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், அங்கிருந்த மக்கள் கொரோனா அச்சத்தின் காரணமாக, அவரை தூக்குவதற்கு மறுத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி என்பவர், ஒருவரை மட்டும் உதவிக்கு அழைத்து, அந்த சடலத்தை தூக்கி சென்றுள்ளார். இவரது இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube