தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் தகராறு!குடத்தை வைத்து அடித்து கொன்ற பெண்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பத்மா.அங்குள்ள குழாய் ஒன்றில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.அனைவரும் வரிசையாக நின்று தண்ணீர் பிடித்தது வருவார்.

இந்நிலையில் நேற்று பத்மா அந்த குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.அப்போது சில பெண்கள் குறுக்கே புகுந்து தண்ணீர் பிடிக்க வந்துள்ளனர்.அவர்களிடம் பத்மா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அந்த பெண்கள் தம் கையில் வைத்திருந்த இரும்பு குடத்தை வைத்து பத்மாவை தாக்கியுள்ளனர்.அப்போது பலத்த காயம் அடைந்த பத்மா ரத்தம் சிந்திய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரம்மா என்பவரை கைது செய்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.தண்ணீர் குழாயில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் குடத்தை வைத்து மண்டையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.