பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் – ஆளூர் ஷா நவாஸ்

பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் – ஆளூர் ஷா நவாஸ்

பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும் என ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ ட்வீட்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளை சார்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 28-ம் தேதி அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நிலையில், இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை அத்துமீறி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் படகில் படுத்து தங்களை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளனர். அதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். தற்போது நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தனது ட்வீட்டர் பக்கத்தில், “மோடி ஆட்சியில் ஒரேயொரு மீனவர் மீது கூட இலங்கை கடற்படையால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை” என்று அண்ணாமலை பேசினார். தற்போது நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூட்டிற்கு அவர் என்ன பதில் சொல்வார்? எனவே, பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும்.

மேலும், நமது மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube