2 வாரத்திற்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – முதல்வர்

2 வாரத்திற்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் பேசிய அவர், சென்னையில் காய்ச்சல் முகாம்களை 400-ஆக  திட்டமிடப்பட்டுள்ளது. 261 ஆய்வகங்கள் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது என்றும், தமிழகம் முழுவதும் 8 லட்சம் முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் கூறுகையில், ரேஷன் கடைகள் மூலம் 8.41 லட்சம் முகக்கவசங்கள் வாழங்கப்பட்டுள்ளன என்றும், கபசுரக் குடிநீர் கூடுதலாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், 2 வாரத்திற்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.