இத்துடன் முடிந்துவிடாது., பிப்.1ல் நாடாளுமன்றம் நோக்கி வருவோம் – விவசாயிகள்

இத்துடன் முடிந்துவிடாது., பிப்.1ல் நாடாளுமன்றம் நோக்கி வருவோம் – விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன 29-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், விவசாய சங்கத்தினர் பேரணி அறிவித்துள்ளனர்.

இதனிடையே, நாளை குடியரசு தினமான நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மறுபுறம் விவசாயிகள் அறிவித்தபடி டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர்.  டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள உத்திரபிரதேச- டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர்களுடன் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube