ரஜினி ஒப்புதலுடன், மக்கள் மன்ற நிர்வாகிகள் நான்கு பேர் நீக்கம்.!

நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 4 கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆர்எஸ் ராஜன், சதீஸ் பாபு, ஈஸ்வரிமதி, அசோக் குமார் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், அவதூறு பரப்பி தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்