பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு!

பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல். 

தஞ்சையில் உள்ள தென்றல் எனும் இடத்தில தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் இரு மகள்களுக்கும் அண்மையில் திருமணம் முடிந்து விட்டது. இருவரில்  மற்றொருவர் சென்னையிலுமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் டாபர்மேன் வகை நாய் ஒன்றை பிள்ளை போல செல்லமாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்க கூடிய இந்த நாய்க்கு அபிராமி என பெயரும்  வைத்துள்ளார்கள். செல்லமாக பிள்ளை போல வளர்த்ததால் இந்த நாயை கவுரவிக்க நினைத்த கிருஷ்ணமூர்த்தி பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். நாய்க்கு வளைக்காப்பா என  நினைத்தாலும்,நன்றியுள்ள ஜீவன் நாயையும் அவர்கள் கவுரவிக்க விரும்பியது பாராட்டுக்குரியதே. இன்னும் 13 நாட்களில் அபிராமிக்கு பிரசவம் நடைபெறவுள்ளதாம்.

author avatar
Rebekal