வில்சன் கொலை..! எர்ணாகுளத்தில் துப்பாக்கி.. திருவனந்தபுரத்தில் கத்தி..தொடர்ந்து கைப்பற்றிய போலீசார்..!

  • வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில்  இருந்து நேற்று மீட்கப்பட்டது.
  • இன்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை திருவனந்தபுரத்தில் உள்ள சம்பானூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து போலீசார் கைப்பற்றினர். 

கடந்த 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பவத்தில் அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரையும் கடந்த 21-ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் சமீம், தஃபீக்கை இருவரையும் 10 நாள்கள் மட்டுமே விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையெடுத்து போலீசார் அப்துல் சமீம், தஃபீக்கை 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

இதையெடுத்து எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அப்துல் சமீம், தவுபிக்  இருவரும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து  தமிழக போலீசார் அப்துல் சமீம், தஃபீக் இருவரையும் கேரளா அழைத்து சென்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை நேற்று கைப்பற்றினர்.

இந்நிலையில் இன்று எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை திருவனந்தபுரத்தில் உள்ள சம்பானூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
author avatar
murugan