ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அமித்ஷாவுடன் மோடி ஆலோசனை!

இந்தியா முழுவதுமான ஊரடங்கு  நீடிக்கப்படுமா? அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை. 

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 4 கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு வருகின்ற 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் 5 ம் கட்டமாக ஊரடங்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இதில் முக்கியமான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

author avatar
Rebekal