வெற்றி பெறுமா மும்பை..? கொல்கத்தா பந்து வீச முடிவு..!

இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

மும்பை அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குருணால் பாண்டியா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா அணி வீரர்கள்:

நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்),  ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. மும்பை அணியும், கொல்கத்தா அணியும் 27 முறை நேருக்கு நேர் மோதியதில் மும்பை அணி 21 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதனால் ரசிகர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் மும்பை அணி எட்டு ஆண்டுகளாக களமிறங்கும் முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan