#DCvCSK: அதிரடி வீரர் டு பிளசிஸ்க்கு பதில் களமிறங்கவுள்ள இம்ரான் தாஹிர்? கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இன்றைய போட்டியில் அதிரடி வீரர் டு பிளசிஸ்க்கு பதில் இம்ரான் தாஹிர் விளையாட வாய்ப்புள்ளது.

ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் பிளேயர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ். இதில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்னே தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ரெய்னா இந்தியா திரும்பினார். அவரைதொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் இந்தியா வந்தடைந்தார். ரெய்னா இல்லாதது, சென்னை அணிக்கு மீட்டில் ஆர்டர் பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்பட்டது.

மேலும், தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த அணியின் அற்புத பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், ஐபிஎல் 2020-ல் சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. முன்னதாக டு பிளசிஸ்க்கு ஓய்வளித்து அவருக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிப்பார். அதை தனக்கு சாதகமாக ஏற்படுத்தினார்.

தாஹிரின் மேஜிக் பந்துவீச்சில் இரண்டு வருடம் சென்னை இறுதி போட்டிக்கு சென்றது. அதில் ஒரு வருடம் கோப்பையை தட்டி சென்றது. அதில் இம்ரான் தாஹிர்தான் மேட்ச் வின்னராக இருந்ததை நாம் அறிந்தோம். தற்பொழுது பிராவோ , சாம் கரன், வாட்சன், டு பிளசிஸ் என அணியில் யாரையும் நீக்க முடியாத சூழலால் அவரை அணியில் எடுக்க முடியவில்லை. மேலும் அவர் பாட்டில் கொண்டு செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இது, சென்னை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர், “நான் விளையாடும் வீரர்களின் வரிசையில் இருப்பேனோ இல்லையோ, எனது ஆதரவு எப்போதும் சென்னை அணிக்கு இருக்கும்” என விளக்கமும் அளித்தார். இன்றைய போட்டியில் டு பிளசிஸ்க்கு ஓய்வளித்து, அவருக்கு பதில் இம்ரான் தாஹிரை களமிறக்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஏனெனில், தற்பொழுது துபாய், ஷார்ஜா, அபுதாபி என அனைத்து மைதானங்களின் பிட்ச் ஸ்லொவாக மாறியுள்ள காரணத்தினால் இம்ரான் தாஹிரை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது. மேலும், அவரின் மேஜிக் பந்துவீச்சின் மூலம் இன்று பேட்ஸ்மேன்களை நடுங்கவைப்பார். இதனால் இன்றைய போட்டியில் தாஹிரை களமிறக்க வாப்புகள் அதிகளவில் உள்ளது.