இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? – தொல் திருமாவளவன்.!

இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? – தொல் திருமாவளவன்.!

7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒருவாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில், இதுதுகுறித்து ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க வேண்டும் என்று கட்சியின் சார்பில் வலியுறுத்திக்கிறோம்.

தனக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தனிப்பெரும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனது? ஆளுநரின் ஒப்புதல் எப்போது? இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? என்று கேள்விகளையும் எழுப்பி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube