ஆஸ்திரேலியா_வில் காட்டு தீ…விமானம் மூலம் அணைக்கும் முயற்சி தீவிரம்…!!

ஆஸ்திரேலியா தாஸ்மானியாவில் ஏற்பட்டுள்ள காட்டுதீ_யை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஆஸ்திரேலியா நாட்டின் தாஸ்மானியா_வில் உள்ள காட்டில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டு தீ பல நூறு ஏக்கருக்கு பரவியுள்ளதால் காட்டு தீ-யை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் .

இதுவரை சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த காட்டு தீ பரவி இருப்பதால் காட்டு தீயை அணைக்க விமானம் மூலம் ரசாயன பவுடர்களை தெளிக்கும் பனி முடுக்கிவிடப்பட்டுள்ளது .

உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு உதவதற்காக  நியூஸ் சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து தீயணைப்பு வீரர்களும் ,  விமானகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் அருகில் வசித்து வரும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுலும் படி அறிவுறுத்தபட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment