இனி விமானத்தில் “WiFi” வசதி – மத்திய அரசு அறிவிப்பு.!

விமானப் பயணத்திற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் விமானியின் பொறுப்பில் உள்ளவரின் அனுமதி பெற்று WiFi வசதியை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப்டாப், செல்போன்கள், டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ் சாதனங்கள் ஆகியவற்றுக்கு WiFi வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதியை ஃபிளைட் மோடில் வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் வெளிச்சமில்லாத சூழலில் பயணிக்கும்போது WiFi வசதியை பயன்படுத்த முடியாது என்றும் இந்த வசதி விரைவில் அனைத்து விமானங்களிலும் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்