10 ஆண்டுகளில் 25 முறை தப்பி ஓடிய மனைவி.. அவளை உண்மையாக நேசிக்கிறேன் கணவன்!

அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் கணவரை விட்டு 25 முறை மற்றொருவருடன் தப்பி ஓடிய மனைவி.

மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள திங் லாகர் கிராமத்தில் 40 வயதான பெண், 10 வருடங்களில் 25 முறை தப்பி ஓடி வெவ்வேறு ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மாஃபிசுதீன் கூறுகையில், 2011 ல் நாங்கள் திருமணம் செய்த பிறகு பத்து வருடங்களில் என் மனைவி சுமார் 25 முறை மற்றவர்களுடன் தப்பி ஓடிவிட்டாள்.

ஒவ்வொரு முறையும், குடும்பத்திற்கு திரும்பிய பிறகு, அவள் அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தாள். ஆனால் இதுவரை அவள் தன் உறுதிப்பாட்டை கடைபிடிக்க தவறிவிட்டாள். சில சமயங்களில் என் மனைவி தன் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றதாகக் கூறினாள். சில சமயங்களில் அவள் நோய்வாய்ப்பட்ட உறவினர்களைப் பார்க்கச் சென்றதாகக் கூறினாள்.

எங்களுக்கு மூன்று குழந்தைகள் என்றும் குழந்தைகளின் பராமரிப்பைக் கருத்தில் கொண்டு நாங்கள் அவளை ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொண்டோம் எனவும் கணவர் மாஃபிசுதீன் தெரிவித்தார். செப்டம்பர் 4 சனிக்கிழமை அன்று நான் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, என் 3 மாத மகனை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, தனது மனைவி ஓடிவிட்டாள் என்று என் தந்தையிடமிருந்து அறிந்தேன்.

பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம், தனது மனைவி ஆடுகளுக்குத் தீவனம் சேகரிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவள் எப்போது திரும்பி வருவாள் என்று தெரியவில்லை. கிளம்புவதற்கு முன், வீட்டில் இருந்து ரூ. 22,000 மற்றும் இதர பொருட்களை மனைவி எடுத்துச் சென்றதாக கணவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், நான் எனது மனைவியை உண்மையாக நேசிப்பதால் அவளை ஏற்றுக்கொள்வேன். எங்களுக்கு மூன்று சிறிய குழந்தைகளும் உள்ளன. நான் என் மனைவியை ஏற்கவில்லை என்றால் அவர்களை யார் கவனிப்பார்கள்? சட்ட மற்றும் பிற பிரச்சனைகளை தவிர்க்க நான் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை என மனவேதனையுடன், உண்மையான காதல் வலியுடன் தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago