மனைவி போட்டி.., என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை பணியிட மாற்றம் ..!

நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆவுடையப்பனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் போட்டியிடுகின்றனர். அதேநேரத்தில், நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரையின் மனைவி ராணி ரஞ்சிதம் அம்பாசமுத்திரம் தொகுதி அம‌முக வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனைவி போட்டியிடம் தொகுதி உள்ள மாவட்டத்தில் வெள்ளத்துரை பணியாற்றியதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பன், திருப்பாசேத்தியில் எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் பிரபு, பாரதி உள்ளிட்ட என்கவுன்டர் சம்பவங்களை வெள்ளத்துரை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan