கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!

தர்மபுரி மாவட்டம் பிக்கனஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி, இவருக்கும் ஒட்டர் திண்ணை கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் இந்த திருமணத்தை விரும்பாத ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் கடந்த 1ம் தேதி விஜயை வரவழைத்து கொலை செய்தார். மேலும் விஜயின் உடலை அரை நிர்வாண நிலையில் பாலக்காடு பகுதி சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் ராஜேஸ்வரி கணவனை இழந்த சோகத்தில் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

நீண்ட நாட்களாக மன மன வருத்தத்தில் இருந்த ராஜேஸ்வரி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இதனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை கொண்டு, பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.