மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்? திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டிக்காதது ஏன் என சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

இராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஈவு இரக்கமின்றி கொலை செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக இலங்கை அரசின் இந்த மனிதநேயமற்ற செயலை கண்டித்து பலரும் தமிழகத்தில் குரல் எழுப்பி வருகின்றனர், பல மாவட்டங்களில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.

ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த நடவடிக்கைக்கு எதிராக இலங்கை அரசை கண்டிக்கவில்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி இன்று சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

author avatar
Rebekal