மோடி அரசு ஏன் விவாதங்களுக்குப் பயப்படுகிறது? மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது – ஜோதிமணி எம்.பி

மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து ராஜ்யசபாவில் உள்ள 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக,அனைத்து விவாதத்திற்கும் நாங்கள் தயார் என்றார் பிரதமர் மோடி . ஆனால் எந்தவித விவாதமும் இல்லாமல் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. மோடி அரசு ஏன் விவாதங்களுக்குப் பயப்படுகிறது?

விவசாயிகளின் மற்ற முக்கியமான கோரிக்கைகளுக்கு மோடி அரசின் பதில் என்ன? குறைந்தபட்ச ஆதரவு விலை,விவசாயத்திற்கு எதிரான மின்சார மசோதா,போராட்ட வழக்குகளை திருப்பப்பெறுதல்,விவசாயிகளை படுகொலைக்குப் பின் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் பதவி விலகல் இவை பற்றி ஏன் மோடி அரசு பேச மறுக்கிறது?

இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்ற மாநிலங்களவையில் போராடிய காங் உள்ளிட்ட 12 எதிர்கட்சி எம் பி கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது குற்றமா? மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.