20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன் ? ராகுல் காந்தி

20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய மற்றும் சீன இடையே லடாக் எல்லையில் நீண்டநாட்களாக  பிரச்சினை இருந்து வருகிறது.இதன் ஒருபகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.தொடர் பேச்சுவார்த்தையும் நடைபெற்று தான் வருகிறது.

இதற்கு இடையில் தான்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய எல்லைக்குள் 20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தேச நலனே மிக முக்கியம்,தேச நலனைக் காப்பது இந்திய அரசின் கடமை என்றும் சீன அதிகாரிகளுடன்  பேசியபோது கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தம் என்பதை ஏன் வலியுறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.