அட நம்ம பாலாவே ஆரியை புகழ்ந்து பேசும் போது ரம்யா ஏன் இப்படி சொல்றாங்க!

இன்று கொடுக்கப்பட்டுள்ள டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் பாலவே ஆரியை புகழ்ந்து கூறும் நேரத்தில், ராம்யா ஆரிக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார். 

விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். இந்நிலையில், நாமினேஷனில் இருந்து தப்பித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளர்கள் இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒன்றாக இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், எழுதி போடப்பட்டுள்ள சீட்டுகளில் ஒன்று எடுத்து வாசித்து அதை எந்த போட்டியாளருக்கு எனக் கூற வேண்டும். அதில் ரம்யா இயற்கையோடு ஒத்து வாழ் எனும் தலைப்பில் ஆரியை பரிந்துரைத்து அவர் 8 பேரில் 7 பேருடன் பிரச்சனையுடன் தான் இருப்பதாக கூறுகிறார். ஆனால் அதே சமயம் பாலா ஆரி மிகவும் நல்லவர் தான் என்பது போல தனது கருத்தைக் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal