பல மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி நிலையில், அதிமுக ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என முதல்வர் கேள்வி.
தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் எதிரான தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் கூட ஒருமனதாக தான் போட்டுள்ளோம். நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துளோம்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் வாசகத்தில் கூட ஒருமனதாக நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறோம். ஆனால், பாஜக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அதனால், சபையில் இருக்கும் பெருபான்மையை வைத்து இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு எப்போதும் உழவர் பக்கம் தான் இருப்போம், உழவர்களுக்காக போராடுகிறோம் என்று சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.
பல மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்த போது, ஏன் வேளாண் சட்டங்களை எதிர்த்து அல்லது திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவில்லை, இதில் என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவால் செய்ய முடியாததை, தற்போது திமுக செய்கிறது. அதனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டுவந்ததை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததையடுத்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…