தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி

தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும், ஏன் கூட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினார் .மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது நடக்கக்கூடிய சம்பவம் விரைவில் நடைபெற போகிறது.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை எதிர்த்து, பழனிசாமி அரசு அறிக்கை விட்டதா? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.