அசாமில் எரிக்கப்பட்ட 2,500 காண்டாமிருக கொம்புகள்..!

அசாமில் எரிக்கப்பட்ட 2,500 காண்டாமிருக கொம்புகள்..!

அசாமில் இன்று 2,500 காண்டாமிருக கொம்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

உலக காண்டாமிருக தினத்தையொட்டி அசாம் அரசு இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது. இன்று 6 ராட்சத உலைகளில் 2,479 காண்டாமிருகக் கொம்புகளை விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், கட்டுக்கதைகளை நீக்கவும் அசாம் அரசு எரித்துள்ளது. அசாமில் உலகிலேயே ஒற்றை கொம்பு அதிகமாக உள்ள காண்டாமிருகம் உள்ளது.

இப்பகுதியில் உள்ள காசிரங்கா, மணஸ், ஓரங் ஆகிய பகுதியின் தேசிய பூங்காவில் உள்ள 2,500 க்கும் அதிகமான காண்டாமிருக கொம்புகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்வில், அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒரு சில அமைச்சர்கள், மற்றும் வன அதிகாரிகள் பங்கு பெற்றுள்ளனர்.

Join our channel google news Youtube