எம்.பி சீட் யார் கொடுத்தாலும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ளுவேன் – நடிகர் சந்தானம்!

யார் தனது ராஜ்யசபையா எம்.பி சீட் கொடுத்தாலும் அங்கு சேர்ந்து கொள்ளுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் நக்கலாக பேசியுள்ளார்.

நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் கே அவர்களின் இயக்களின் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் எனும் புதிய படமொன்றில் நடித்திருக்கிறார். ஆ.வில்சன் அவர்களின் ஒளிபதில்வில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த ப டம் வருகின்ற 12 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்ட கதாநாயகன் சந்தானத்திடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அப்பொழுது படத்தில் இணைந்திருப்பது போல அரசியலிலும் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்பீர்களா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அதற்கு எப்பொழுதும் போலவே நக்கலாக பதிலளித்த சந்தானம், எம்.பி.சீட் யார் தந்தாலும் அங்கு சேர்ந்து கொள்வேன் என கூறி சிரித்துள்ளார். அதன் பின் தனக்கு அரசியல் எண்ணம் எல்லாம் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal