ஷங்கர்-ராம் சரண் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.?தென்னிந்திய நடிகை ஒண்ணும் வேணாம் போல .!

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தினை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஷங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பிற மொழியை சார்ந்த மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாகவும் , அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தானா நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்து .ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை.இந்த நிலையில் தற்போது படத்தின் ஹீரோயின் குறித்த மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஷங்கர்-ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை சுஸி பேயிடம் ஷங்கரின் ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…

18 mins ago

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…

22 mins ago

மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…

24 mins ago

சுத்தமா சரியில்லை…மோசமான பீல்டிங் செட்! ருதுராஜை விமர்சித்த அம்பதி ராயுடு!

Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…

31 mins ago

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…

50 mins ago

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…

1 hour ago