எதிர்க்கட்சித் தலைவர் யார்..?.., அதிமுக எம்எல்ஏ கூட்டம் ஒத்திவைப்பு..!

திங்கள்கிழமை காலை 09:30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

அதிமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்எல்ஏ கூட்டம் ஒத்திவைப்பு:

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாமல் வரும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களிடையே விவாதம் ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகள் இடையே 4 மணி நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவும் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

முடிவு எட்டப்படாததால் திங்கள்கிழமை காலை 09:30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் யார்..? அதிமுகவில் இழுபறி:

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்பாக அதிமுக தரப்பில் இழுபறி நீடித்துள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இழுபறி நீடிப்பு. தேர்தலில் செலவு செய்தது யார்..? 234 தொகுதிகளிலும் உழைத்தது யார்..? என ஈபிஎஸ் கேள்வி நீங்கள் செலவு செய்த பணம் கட்சியினுடையது தானே என ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் பதில்

தேர்தல் தோல்விக்கு காரணம் யார்..?

ஈபிஎஸ் எடுத்த முடிவுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என ஓபிஎஸ் தரப்பில்  குற்றச்சாட்டு, கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எப்படி விட்டுக் கொடுப்பது ..? என ஈபிஎஸ் தரப்பில் வாதம். எத்தனை முறை விட்டு தருவது என ஓபிஎஸ்க்கு ஆதரவாக கடம்பூர் ராஜு பேச்சு. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்ததால் தான் தென் மாவட்டங்களில் வெற்றி இழந்தோம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.நினைவிடத்திலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்:

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இருவரும் ஜெ. நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார், ஜெ.நினைவிடத்திலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒபிஎஸ்க்கு  பதவி வழங்காவிட்டால் தீக்குளிக்க தயங்க மாட்டோம் என தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

murugan

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

2 hours ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

3 hours ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

3 hours ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

10 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

13 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

15 hours ago