பிக்பாஸ்ல யாரு ஜெயிச்சா சந்தோஷப்படுவீங்க.? மனம் திறந்த சுரேஷ் சக்கரவர்த்தி.!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஷிவானி ஜெயித்தால் சந்தோஷப்படுவேன் என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . இது பலருக்கும் கடும் அதிர்ச்சியாகவே இருந்தது .

எல்லோருக்கும் கடும் போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி அடிக்கடி தந்திரங்களை பயன்படுத்தியும், கொளுத்தி போட்டும் போட்டியை சுவாரசியமாக கொண்டு சென்றார் . அவர் வெளியேறியதும் பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் முதலில் அளித்திருக்கும் பேட்டியில் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறினார் .

அப்போது சுரேஷ் சக்கரவர்த்தியிடம் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களில் யார் ஜெயித்தால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது .  அப்போது அந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது ஷிவானியை மட்டும் தான் என்றும் , அவர் ஜெயித்தால் சந்தோஷப்படுவேன் என்றும் கூறியுள்ளார் . மேலும் அவர் பாலாஜியை காதலிக்கவில்லை என்றும் , அவர் எந்த தவறும் செய்யவில்லை, ஷிவானி பாவம் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.