வரலாறு முக்கியம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரக்யா நாக்ரா. இவர் ஹரியானாவின் அம்பாலாவில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார் . சினிமா மீது ஆர்வம் கொண்ட இவருக்கு அந்த சமயம் சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு இருந்தார்.

பிறகு அவருக்கு ஜீவாவுக்கு ஜோடியாக வரலாறு முக்கியம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். அந்த திரைப்படத்தை தொடர்ந்து N4 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

இருப்பினும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாத நடிகை பிரக்யா நாக்ரா எப்போதும் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அது மட்டுமின்றி ஒரு சில சமயம் கிளாமரமாகவும் புகைப்படங்களை வெளியீட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது சேலையில் அடக்க ஒடுக்கமாக சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் அட்டகாசமாகவும் அழகாகவும் இருப்பதால் புகைப்படத்தை பார்த்த பலரும் எந்த பக்கம் பாத்தாலும் கிக் ஏறுது எனவும் பார்வையால் பஞ்சர் ஆக்கிட்டிங்க எனவும் கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகை பிரக்யா நாக்ரா தற்போது நதிகளில் சுந்தரி யமுனா எனும் நாடக தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த நாடக தொடரின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.