இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது இளம்படைகளை கொண்ட டெல்லி அணியா? அனுபவமிக்க படைகளை கொண்ட சென்னை அணியா?

மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது.இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.அதேபோல் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.இந்த போட்டியில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.இதனையடுத்து வெற்றி பெற்ற டெல்லி அணி நாளை நடைபெறும் தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் சென்னை அணியுடன் விளையாடுகிறது.இந்த விசாக்கப்பட்டினம் மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு நடைபெறுகிறது.

குறிப்பாக டெல்லி அணியை பொறுத்தவைரை இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது.இளம் வீரர்களை அந்த அணி வைத்திருந்தாலும் ஜொலித்து தான் வருகிறது.ஆனால் இந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை டெல்லி அணி சென்னை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோவியை தழுவியுள்ளது.

காரணம் சென்னை அணியில் அனுபவமுள்ள வீரர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளதுதான்.இருந்தாலும் நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லி அடிக்கும் சிறப்பு டெல்லி அணிக்கு உள்ளது.நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுவது யார் என்று தெரிந்துவிடும்..நாளைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுமா?டெல்லி அணி வெற்றிபெறுமா ? உங்களது அன்பான  கருத்துகளை பதிவிடுங்கள் …

 

Leave a Comment