டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்த கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 22,854 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இதில் ஒரே நாளில் 126 பேர் இறந்துள்ளனர், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,58,189 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,12,85,561 ஆகவும்,நாடு முழுவதும் சிகிச்சை பெற்றுவருபவர்களின்  எண்ணிக்கை 1,89,226 ஆகவும் உள்ளது.

author avatar
Dinasuvadu desk