அறிவியலை தாய்மொழியில் கற்கும்போது தமிழ் சான்றோர் அவையில் பேசப்படும்-  மயில்சாமி அண்ணாதுரை

அறிவியலை தாய்மொழியில் கற்கும்போது தமிழ் சான்றோர் அவையில் பேசப்படும்-  மயில்சாமி அண்ணாதுரை

புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்  வெளியிட்டது. புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதற்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்  3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.ஆனாலும் புதிய கல்வி வரைவு கொள்கையை நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கை பற்றி நாம் பேசி வரும் நிலையில், தமிழை கற்க கூடாது என கூற யாருக்கும் உரிமையில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அறிவியல் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முகவரியாக இருக்கும், அறிவியலை தாய்மொழியில் கற்கும்போது தமிழ் சான்றோர் அவையில் பேசப்படும் என்று  மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Join our channel google news Youtube