கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதன்படி ஏற்கனவே முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தவணை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட பொது வினியோகத் திட்டத்தில் இருந்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்கு ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அதன் முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், இதன் தொடர்ச்சியான இரண்டாம் தவணை 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்க்கான திட்டத்தை மூன்றாம் தேதி முதல்வர் துவங்கி வைத்தார். இந்த பொது வினியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன்கள் வருகிற 11ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் எனவும், இந்த டோக்கன் அடிப்படையில் 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வருகிற 15-ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் காலை 8 முதல் பகல் 12 மணி வரையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஒரே நேரத்தில் நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்களை பெற்று செல்லககூடிய வகையில் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்குமே இந்த நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்பதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் பெற முடியாதவர்கள் வரக்கூடிய மாதத்தில் அவர்களுக்கான மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை பெற்றுக் கள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை பெற செல்லக்கூடிய குடும்ப அட்டைதாரர்கள் தனிநபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற முக்கியமான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…