மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும்? – சென்னை மாநகராட்சி

மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும்? – சென்னை மாநகராட்சி

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமளியில் இருந்த நிலையில், தற்போது தான் மெது மெதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், தமிழகத்தில் தியர்ட்டர்கள் மற்றும் மெரினா கடற்கரை போன்ற முக்கியமான இடங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களை மெரினா கடற்கரையில்  அனுமதிப்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

அதன்படி, பொதுமுடக்கம் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்டொபர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் -9ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள தள்ளுவண்டி கதைகளுக்கான டெண்டர் திறக்கப்படுகிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube