புரெவி புயலானது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரெவி புயலாக வலுப்பெற்றது. இலங்கையின் திரிகோணமலைக்கு 140 கி.,மீ தொலைவில் ’புரெவி’ புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 550 கி.மீ தொலைவிலும் ” புரெவி புயல்” நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலானது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று மாலை மற்றும் இரவு இடைப்பட்ட காலத்தில் இலங்கையை கடந்து பிறகு நாளை பகலில் பாம்பன் அருகே நிலைகொள்ளும்.பின்னர் மேற்கு தென்மேற்கு திசையில் தென் தமிழக கடற்கரையை ஒட்டி மெதுவாக நகர்ந்து.டிசம்பர் 3-ஆம் தேதி இரவு அல்லது டிசம்பர் 4-ஆம் தேதி அன்று அதிகாலையில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையில் தென் தமிழக கடற்கரையை கடக்கக் கூடும்.இதன் தாக்கம் நாளை காலை ராமநாதபுரத்தில் தொடங்கி படிப்படியாக கன்னியாகுமரி வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…