தமிழகத்தின் இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசின் அனுமதி எப்போது?

மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க காலம் தாழ்த்தி வருகிறது.

மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணியன். இவர் கொரோனா நோயின் தொடக்கமான முதல் அலையின் போது சித்த மருத்துவ பொடியான இம்ப்ரோ என்ற சித்த மருந்தை தயாரித்தார். இது குறித்து கூறுகையில், இந்த சித்த மருந்து பல மூலிகைகளின் கூட்டு சேர்க்கையாக தயாரிக்கப்பட்டது. இந்த மருத்துவ பொடியில் 66 வகையான மூலிகைகள் இருக்கிறது என்றும் இது 12 முதல் 14 வரை வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்ட இந்த மருந்தில் தீநுண் கிருமிகளை கொல்லக்கூடிய சக்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த இம்ப்ரோ சித்த மருந்தை தமிழக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவக்குழு பரிசோதனை செய்துள்ளது. இதில் வைரஸ் கிருமியை அழிப்பதற்கான எதிர்ப்பு சக்தி இருக்க வாய்ப்புள்ளது என்று தமிழக சித்த மற்றும் ஆயுர்வேத குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசிற்கு இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசிடம் இந்த இம்ப்ரோ சித்த மருந்தை வைராலஜி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு டாக்டர் சுப்பிரமணியன் 1 வருட காலமாக போராடி  வருகிறார்.

இது தொடர்பாக சட்ட ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இந்த இம்ப்ரோ மருந்தின் அங்கீகாரம் குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்திக்கொண்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திராவில் ஆனந்தையா என்பவர் தயாரிக்கும் ஆயுர்வேத லேகியத்திற்கு 2 நாட்களில் அனுமதி வழங்கிருக்கிறது மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவக்குழு ஆனால் தமிழத்தில் டாக்டர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்திற்கான அனுமதியை வழங்குவதை மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பது வேதனையை அளித்து வருகிறது.

இம்ப்ரோ மருந்தின் பரிசோதனைக்காக மத்திய அரசு கேட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்க வேண்டியும் டாக்டர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recent Posts

இன்றுடன் தபால் வாக்கு நிறைவு! நாளை பிரச்சாரம் ஓய்வு! இறுதி கட்டத்தில் மக்களவை தேர்தல்!

Election2024: இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

28 mins ago

வங்கதேச தொடருக்கான மகளிர் அணியை வெளியிட்டது பிசிசிஐ!!

T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய…

33 mins ago

சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17-…

49 mins ago

கோட் படத்தில் விஜயகாந்த்! உண்மையை உடைத்த பிரேமலதா!

Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த்  AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்…

49 mins ago

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை !! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ !!

Gold Price: சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

1 hour ago

பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற…

2 hours ago