இந்த படம் வெளியானபோது என்னை விலைமாது (Prostitute) என அழைத்தனர்.! அஜித் பட நடிகை வருத்தம்.!

  • ஹிந்தியில் கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி, தமிழில் நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவார் கல்கி கோச்சலின்.
  • இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது என்று அழைத்தனர். மற்றும் என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார் என கூறினார்.

ஹிந்தியில் கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோச்சலின். இவர் தமிழில் அஜித்குமாரின் நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவார். பின்னர் இவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கல்கி கோச்சலின், இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ்பர்க் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். கல்கி கோச்சலின் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில், கல்கி கோச்சலின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றியில், நான் நடிகையாக பல வேதனைகளை சந்தித்து இருக்கிறேன். இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது (Prostitute) என்று அழைத்தனர். இதனால் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டது. பின்னர் ஹாலிவுட் படங்களிலும் இதே போன்று பிரச்சினையை சந்தித்தேன். என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்.

மேலும், அவர் என்னை தனியாக வெளியே அழைத்து செல்லவும் முயற்சித்தார். அதற்கு நான் மிகவும் கடுமையாக மறுத்து விட்டேன். இதனால் அவருடைய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார். அதனிடையே நான் நடித்த ஏ ஜவானி ஹாய் திவானி படம் வெற்றி படமாக எனக்கு அமைந்தது. ஆனாலும் யாரும் எனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கல்கி கோச்சலின் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்