பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் ஆலோசனை.!

பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. 

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறார். 

இதனிடையே தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா மற்றும் 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் பொதுமுடக்கத்தை நீடித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்றும் முதல்வர் கேட்டறிகிறார். ஏற்கெனவே மருத்துவ குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் 4 முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்