என்ன கொடும சார்.! அடுப்பின்றி காரில் பன்றி கறியை சமைத்த ருசிகர சம்பவம்.!

  • ஆஸ்ரேலியாவில்  இருக்கும் ஒருவர் அடுப்பின்றி தனது காரில் பன்றி இறைச்சியை ஒருவர் சமைத்த ருசிகர சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
  • நகைச்சுவையுடன் இந்த பதிவை பலரும் பகிர்ந்தும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளுமாறு அறிவுரை கூறியும் வருகிறார்கள்.

ஆஸ்ரேலியாவில் உள்ள பெர்த் (Perth) நகரத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால் ஸ்டு பெங்கெல்லி (Stu Pengelly) என்பவர் பகலில் அவரது காரின் இருக்கையில் சமைக்காத பன்றிக் கறி வைத்ததாகவும், அதை 10 மணி நேரத்துக்கு பின் சென்று பார்த்தப் போது பன்றிக்கறி நன்றாக வெயிலில் வெந்து இருந்ததாகவும்அவரது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக கறியை சிறு சிறு துண்டுளாக வெட்டி அதை புகைப்படம் எடுத்தும் பதிவிட்டிருந்தார். பின்னர் நகைச்சுவையுடன் இந்த பதிவை பலரும் பகிர்ந்துள்ள நிலையில், வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுவதற்கு சிலர் அறிவுரையும் வழங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்